5. அருள்மிகு வடிவழகிய நம்பி கோயில்
மூலவர் வடிவழகிய நம்பி
உத்ஸவர் ஸுந்தரராஜன்
தாயார் அழகியவல்லி நாச்சியார்
திருக்கோலம் கிடந்த திருக்கோலம், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் மண்டூக புஷ்கரணி, கொள்ளிடம்
விமானம் தாரக விமானம்
மங்களாசாசனம் திருமழிசையாழ்வார்
இருப்பிடம் திருஅன்பில், தமிழ்நாடு
வழிகாட்டி திருச்சியிலிருந்து கல்லணை வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் நடராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். லால்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ.
தலச்சிறப்பு

Anbil Gopuram Anbil Moolavarஒரு ரிஷி நெடுநேரம் தண்ணீரில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருந்தார் இதை அறிந்த துர்வாச முனிவர் அவரைக் காண வந்தார். ஆனால் ரிஷி தவத்திலிருந்து எழாததால் கோபம் கொண்ட துர்வாசர், அவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சபித்தார். மண்டூகமாக மாறிய ரிஷி இத்தலத்திலேயே திருமாலை நினைந்து தவத்தைத் தொடர்ந்தார். திருமாலும் காட்சி தந்து ரிஷியின் சாபவிமோசனம் அளித்தார்.

மூலவர் வடிவழகிய நம்பி என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் ஸுந்தரராஜன். தாயார் அழகியவல்லி நாச்சியார் என்று வணங்கப்படுகின்றார். பிரம்மா, வால்மீகி, மண்டூக முனிவர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

திருமழிசையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com